ஒன்றாக வாய்ப்பில்லை
துன்பம் தன் வாசல் கதவைத்
தட்டும் வரை
துன்பத்தின் கொடுமை
சிலருக்குத் தெரிவதில்லை...!
கடந்து வந்த பாதை
சிலருக்கு மலர் வனம்......
சிலருக்கு முள் வனம் ......
இரண்டும் ஒன்றாக
ஒருபோதும் வாய்ப்பில்லை...!
தன் வாழ்க்கை அனுபவத்தில்
இன்பத்தை மட்டும் கண்டவன்
ஏழையைப் பார்த்து நகைக்கிறான்...
பணமெனும் செல்வாக்கால்
பல்லக்கில் தினமும் மிதக்கிறான்..!
வாழ்க்கை அத்தியாயம் மாறி
துன்பம் வாசல் கதவைத்
தட்டும்போது
சிரித்த வாய் மூடி
சிதைந்துபோவான் மனிதன்..........!!!!
===========================================
தோழி துர்க்கா