கை நழுவிய கவிதை நீ
என்னவளே ....
கடந்து போன இந்த காலங்கள் எல்லாம்
நீ இன்றி போனதனால்.......
என் வாழ்வின் இருண்டு போன காலங்கள்
என்றே சொல்லலாம்...
ஒன்றி போன நம் இதயங்களை
காலம் எனும் ஆயுதம் .....
கொன்று போனது எவ்வாறு ?
என இன்று வரை விளங்கவில்லை எனக்கு....
உனக்கு நானும் எனக்கு நீயும்
பிறந்தோம் என்ற நம் எண்ணங்கள் எல்லாம்
ஏற்றா விளக்காய் போனது ஏனடி...
விளங்க வில்லை இன்னும் எனக்கு...
உள்ளம் கொண்ட காதலை ....
நான் சொல்வேன் என நீயும்
நீ சொல்வாய் என நானும் ...
காத்திருந்த காலங்களும் ...
பின் என் மனதை நீயும் உன் மனதை
நானும் உணர்ந்து நீ
வெட்கி நின்ற கோலமும் ...
இன்னும் சிரிக்கையில் ....
எந்தன் காதல் கவிதையே ...
எந்தன் கை நழுவிய கவிதையாய்
உன்னை காலம் மாற்றி போனதனால்
எந்தன் உள்ளம் மட்டும் அழுகிறதடி...
என்னவளே ...
உன்னை வேறு எந்த உறவும் கொண்டு
அழைக்க முடியாத காரணத்தால் ....
இன்றும் கூட .... நான் உந்தன்
நினைவுகளோடுதான் வாழ்கின்றேன்....
எதிர்பாரா விதமாய் இன்று நாம் சந்தித்த
வேளையில் சங்கடத்தில் நெளிந்த என்
உள்ளத்து தேவதையே.....
கலங்காதே மாற்றான் மனைவி ஆன
பின்னும் உன்னிடம் மயங்கி நிற்கும்
கண்ணியமற்றவன் நான் அல்ல.....
விதிமுறை மீறிய வாழ்க்கையில் ....
விருப்பம் இல்லை... எனக்கு...... என்றாலும்
என் உயிர் பிரிகின்ற வரையில்
வாழ ஏங்குகின்றேன் நான்
உன்னோடு அல்ல .....
உன் நினைவுகளோடு ....மட்டுமே