அடிமைகளின் அடிமைகள்----அஹமது அலி----

நமக்கு நாமே
சூனியம் வைப்பதில்
நாம் சிறப்பானவர்கள்!
*)))
நம்மை ஆள்வதற்கு
தகுதியற்றவர்களை
நாம் தேர்ந்தெடுக்கும்
ஒவ்வொரு முறையும்!
*)))
நம் வரிப் பணத்தில்
நமக்கே இலவசங்களாம்...!
*)))
இலவசங்களுக்கு பல்லிளித்து
இலவசமாகவே
இழந்து விடுகிறோம்
நம் உரிமைகளை!
*)))
சில நூறுகளுக்கு
விலையாகி
ஐந்து ஆண்டுகளுக்கு
அடிமைகளாய்...!
*)))
வாக்களர்கள்
வாக்கு மீறுவதில்லை
கை நீட்டி
காசு வாங்கிய பிறகு!
*)))
வேட்பாளர்கள்
வாக்கை நினைப்பதில்லை
ஏமாற்றி பெற்ற
வெற்றிக்கு பிறகு!
*)))
நாமே அடிமையான பிறகு
நாம் தேர்ந்தெடுத்த அடிமைகளில்
யார் முதுகுத் தண்டு
சிறப்பாக வளைகிறதோ
அவரே அமைச்சர்!
*)))
அடிமைகள் தேர்ந்தெடுத்த
அடிமைகள் ஆட்சி
இருள் காடா?
ஒளிர் சுடரா?
*)))
எண்ணிக்கையில்
கல்விக் கூடங்களை
மிகைத்து விட்ட
மதுக்கடைகளால்
கல்வியை விடவும் மது
முக்கியத்துவம் பெற்று விட்டது!
*)))
குடி மகன்களை
"குடி"மகன்களாகவே
நடத்துவது தானே
நல்லாட்சியின் அடையாளம்
அது தானே நடக்கிறது இங்கே!
*)))
எங்கும் எதிலும்
ஊழல்கள் மலிந்த நிலையில்
மணல் கொள்ளை
ஒரு முன்னோட்டமே!
*)))
வரும் காலங்களில்
என் தொகுதியை நான் விற்கிறேன்
உன் தொகுதியை நீ விற்றுக் கொள்
என்றபடி நம்மவர்கள் துணிந்தால்
மாநிலமே கொள்ளை போனாலும்
ஆச்சர்யபடுவதற்கில்லை!
*)))
குப்பைகளை சுத்தம் செய்ய
வீட்டுக்கொரு துடைப்பம்
இருப்பதைப் போல்
நாட்டுக்கும் நமக்கும்
ஒரு துடைப்பம் அவசியமே!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (21-Dec-13, 7:45 am)
பார்வை : 410

மேலே