வளர் பிறை-21

ரகுவின் பேச்சு ரவியையும் கணேஷையும் கலங்க வைத்தது,,,,, ஆனாலும் அவர்கள் அதை வெளிக்காட்டி கொள்ள வில்லை


"என்ன டா மிரட்டுறியா"- கேட்டான் கணேஷ்

"இல்ல உண்மையத்தான் சொல்றேன்"

"என்ன டா உண்மை"

தன சட்டையை விளக்கி காட்டினான் ரகு,,,,,,,, அதில் கலர் கலராக ஒயர்கள் பொருத்தி,,,,,,, வெடி குண்டு

ரிமோட்டால் இயங்க கூடியது,,,,,, அந்த ரிமோட் ரகு கையில்,,,,,,,,,


"ஒழுங்கா என் பேச்ச கேளுங்க இல்ல நீங்க நான் எல்லாரும் இங்கயே வெடிச்சி சிதற வேண்டியது தான்,,,,,,, நான் என் உயிர பத்தி கவலை படுறவன் இல்ல,,,,,,,,, தெரிஞ்சிக்கோங்க" - என்றான் ரகு


"டேய் ரகு,,,,,,, சொன்னா கேளு இதெல்லாம் வேண்டாம்,,,,,,, புரிஞ்சிக்கோ டா,,,,,, லைப் ல நாம அனுபவிக்க வேண்டியது நெறைய இருக்கு,,,,,, பேசாம நீயும் எங்களோட சேந்துடு நெறைய சம்பாதிக்கலாம்,,,,,,,, நான் உன் அண்ணன் டா,,,,,,, நான் சொல்றத கேளு"- அவனை பாச வலையில் வீழ்த்த திட்ட மிட்டான் ரவி

"ச்சீ நீயெல்லாம் ஒரு அண்ணனா??? நீ ஒரு கொலைகாரன்,,,,,,,, நீ மனுஷனே இல்ல,,,,,, ஒழுங்கா என் பேச்ச நீ கேளு,,,,,,, இல்லன நீ மோசமான பின் விளைவுகள சந்திக்க வேண்டி வரும்"- மிரட்டும் தொனியில் சொன்னான் ரகு


இருவரின் வாக்கு வாதம் தொடர்ந்துக் கொண்டிருக்க,,,,,,, அந்த சமயம் ரகுவின் ரிமோட்டை தட்டி விட்டான் கணேஷ்

இப்போது ரவியின் கையில் ஒரு துப்பாக்கி,,,,,,,

"ஹான்ட்ஸ் அப்"- ரகுவின் முதுகில் துப்பாக்கியை வைத்தான் ரவி

ரகு கையை உயர்த்தினான்.,,,,,,,,,,,,,,,,

கணேஷ் மெல்ல ரகுவின் மீதிருந்த வேஷ் கோர்ட் அமைப்பு கொண்ட வெடி குண்டை கழட்டினான்

ரவி ரகுவின் தலையில் ஓங்கி அடித்தான்,,,, மயக்க முற்று விழுந்தான் ரகு

"ரவி இவன் எப்படி இவ்ளோ தூரம் தெரிஞ்சி வந்துருப்பான்,,,,,,,,, கண்டிப்பா நம்ம ஆளுங்க இவன் கிட்ட மாட்டி இருக்கணும்"


"ஆமா அத என் கிட்ட விட்டுட்டு நான் பாத்துகிறேன்,,,,,,,, "

"சரி நீ இவனை என்ன பண்ண போற"

"இவனை இங்கயே அடைச்சி வை ,,,,,,,, நான் இவன மாதிரியே இருக்கேன்ல அத வச்சி மீதி கேம்ம நான் முடிக்கிறேன்"



இருவரும் சிரித்தார்கள்,,,,,,,,,, ரகுவை அந்த வீட்டின் ஓர் அறையில் அடைத்து வைத்தான் ரவி,,,,,,, அவன் உடைகளை தான் மாற்றி கொண்டான்,,,,,,,,,,,,

"இவன் இங்கயே இருக்கட்டும்,,,,,,,,,,"

"என்ன ரவி யாரா இருந்தாலும் கொல்ல தயங்க மாட்ட இப்போ தம்பிங்கவும் பாசம் தடுக்குதோ"- கேட்டான் கணேஷ்


"பாசமா எனக்கா அதும் இவன் மேலையா,,,,,,,, ச்ச்ச அதெல்லாம் இல்ல,,,,,,, எங்க அப்பா என் நடவடிக்க புடிக்காம சொத்தையெல்லாம் இவன் பேருக்கே எழுதிவைக்க முடிவு பண்ணாரு,,,,,,, ஆனா இவன் நான் இரண்டு பேரும் ஒன்னா கையெழுத்து போட்ட மட்டும் தான் செல்லும்குற மாதிரி உயிர் எழுதி வைக்க சொல்லிட்டான்,,,,,,,,,,,,,,,"


"ஏன் அப்படி இதனால அவனுக்கு என்ன லாபம்,,,,,,"

"ம்ம்ம்ம் இவன் கையெழுத்து இல்லாம நானோ என் கையெழுத்து இல்லாம அவனோ இந்த சொத்த எதும் செய்ய முடியாது,,,,,,, ஒரு வேல இந்த சொத்து அவன் பேருல மட்டும் இருந்தா நான் அவனை கொன்னுட்டு நான் தான் ரகுன்னு சொல்லிடுவேன்னு அவனுக்கு பயம்"


இதை கேட்ட கணேஷ்,"ம்ம்ம் நீ தான் கிரிமினல்னு நெனச்சேன்,,,,,,, உன் தம்பி உன்ன விட கிரிமினல்லா இருக்கானே"


"ம்ம்ம்ம் பத்து மாசம் என் கூட இருந்தவனாசே, எப்படி இல்லாம இருப்பான்,,,,,,,,, சரி சரி நான் கெளம்புறேன் "


" ஓகே ரவி"


சிரித்தான் "இல்ல ரகு"- என திருத்தினான் ரவி

"சாரி ஓகே ரகு,,,,,, "


ரவி ரகுவாக மாறி அந்த வீட்டை விட்டு வெளியேறினான்,,,,,,,,,


(வளரும்,,,,,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (21-Dec-13, 3:36 pm)
பார்வை : 154

மேலே