தண்ணீர் தேசமல்ல தமிழகம்
அந்நிய தேசமல்ல
நாங்கள்
தேசத்தின் அங்கமே
அண்டை தேசத்து
மக்காள்...!
தங்களுக்கு
தெரியும்
தமிழகம்
தண்ணீர் தேசமல்ல...!
மடல் எழுதி
மழையை
எங்கள் தேசம்
அழைக்க
வித்திட்ட விவசாயிகள்
வித்தைக்காரர்கள்
அல்லர் சகக்காள்...!
நிலத்தையல்ல
உளத்தையும்
பிரிப்பது
இந்த தண்ணீர் தான்!
தினமும்
நீங்கள்
தின்று தீர்ப்பது
வெறும்
தண்ணீர் மட்டும் தானா?
தலைக்கு மேல்
வெள்ளம் போனால்
மடை திறக்கிறீர்கள்
தட்டுப்பாடு
என்றால்
தண்டிக்கிறீர்கள்!
தமிழ் தேசத்து
நெற்கதிர்களை
உலகம்
உண்ட காலம் போய்
ஊர்வன
உண்ணும் காலம்
எங்கள் உழவர்களுக்கு!
உழவு
களவு போகும்
போலிருக்கிறது
உதவுங்கள்
உயிர் கொடுங்கள்
எங்களுக்கு...!