என்னுள் அனைத்துமாய் நீ

நீ மட்டும் நிறைந்திருக்கும்
என் தனிமையின்
கடைசி வரிசை பார்வையாளனாக நான்.

எனக்கென்று ஒரு துளி கூட இல்லை,
என் கடல் முழுவதும் நீ..

என் வார்த்தைகளினுள்
உறங்கிக்கிடக்கிறாய்.
இமைப் பிரிதலின் வழி
கவிதையாய்க் கதைக்கிறாய்..

உன்னை எழுதித்
தீர்க்க முடியவில்லை.
என் வார்த்தைகள்தோறும்
உன் அருகாமையின் நிழல்.

எழுதியவர் : தனேஷ் நெடுமாறன் (23-Dec-13, 1:23 pm)
பார்வை : 127

மேலே