பள்ளத்தை நிரப்புவோம் - படிக்கட்டுகள் உருவாகும்

பள்ளங்களும் மேடுகளும்
பாதையிலே சகஜம் - நம்
பார்வையிலே தீர்க்கம் வைக்க
பாதக் காயம் விலகும்....!

இமை திறந்து இருப்பது மட்டும்
இதற்கு தீர்வு ஆகாது - மனம்
இறந்து விடாமல் இருப்பதுவே
இனிய தீர்வு ஆகுமென்பேன்...!

முள்ளை முள்ளால் எடு - அது
முடிந்தது - இனி கவலை விடு..!

இனிமையை அடுத்து எடு - இதோ
எதிர்காலம் சிரித்து விடு....!

களித்து விடு..! ஜொலித்து விடு
காரியத்தில் ஜெயித்து விடு....!

முறித்து விடு..! முடித்து விடு..
முட்டுக் கட்டைகளை தகர்த்து எடு ...!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (25-Dec-13, 4:09 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 82

மேலே