மீண்டும் குழந்தையாக வேண்டும்

குடை விரித்து குத்த வைத்து
குட்டிக் கதை பேசி மகிழ்ந்து....
குதூகலித்த நாள் வருமோ ?
கூறடா என் நண்பா........!

பரிதவித்து பணம் தேடி
பாசம் என்பதையும் மறந்து...
பசியை உடலுக்கும் வைத்து
பாரில் நாம் அலைவதேனடா..?!

ஆசை ஒன்றும் அன்று இல்லை
அன்பு மட்டுமே நமது சொத்து
அன்பு மட்டும் இன்று இல்லை - மற்ற
அனைத்து சுகத்தால் வந்ததே வம்பு...!

சிற்றின்பம் தேடும் பகுத்தறிவு அவசியமோ ?
சிந்தையிலே கபடம் கொண்டு உதட்டில்
சிரிப்பதுவும் அவசியமோ ?
சீக்கிரமே சொல்லடா நீ !

எங்கிருந்து இதைப் படித்தோம் ? இனி நாம்
எப்போது மீண்டும் குழந்தையாவோம் ?

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Dec-13, 5:31 am)
பார்வை : 337

மேலே