கனவுகளே----ஆயிரம் கனவுகளே------

பாதையெங்கும் பூக்கள் உண்டு
பறவை ஒலியில் அன்பு உண்டு
விரல் தொடவே தென்றல் உண்டு - நலம்
விசாரிக்கவே கடவுள் உண்டு.....!

கவிஞன் எனக்கு கவலை எதற்கு ?
கனவு என்ற சொத்து இருக்கு...!
உனக்கும் கொடுக்க ஆசை இருக்கு..
உடனே வா வானம் திறந்து இருக்கு....!

தேடிஎங்கும் அலையாதே உனக்குத்
தெரியும்படியே நான் இருப்பேன்....
விழியை மூடியே என்னைப் பார்....
விளங்கிக் கொள்வாய் நீ நானென்று...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Dec-13, 5:53 am)
பார்வை : 239

மேலே