கனவுகளே----ஆயிரம் கனவுகளே------
பாதையெங்கும் பூக்கள் உண்டு
பறவை ஒலியில் அன்பு உண்டு
விரல் தொடவே தென்றல் உண்டு - நலம்
விசாரிக்கவே கடவுள் உண்டு.....!
கவிஞன் எனக்கு கவலை எதற்கு ?
கனவு என்ற சொத்து இருக்கு...!
உனக்கும் கொடுக்க ஆசை இருக்கு..
உடனே வா வானம் திறந்து இருக்கு....!
தேடிஎங்கும் அலையாதே உனக்குத்
தெரியும்படியே நான் இருப்பேன்....
விழியை மூடியே என்னைப் பார்....
விளங்கிக் கொள்வாய் நீ நானென்று...!!