இன்று புதிதாய்

கை மடக்கி
கண் மலர
காத்திருக்கும்
கண்மணி ...

நீ
உள்ளே
இப்போது தான் அரும்பிய
புது மொட்டாய்.

நாங்கள் வெளியே
அம்மா அப்பா
தாத்தா பாட்டி
குட்டி அக்கா
உன் குடும்பம் முழுதும் .

உண்ணும்போதும் உறங்கும்போதும்
உன்னைத்தான் நினைத்திருப்பாள்
உன் தாய்

தான் பெரும் மக்கள் தான்
தனக்கு தங்கம் வைரம் பவழம் என
தாளாத பரவசத்தில்
தவமிருந்து பெற்றெடுப்பாள்

நீ
கடவுளின் வரத்தாலே அவள்
கருவினிலே உருவானாய்
ஆணாயினும் பெண்ணாயினும்
அன்புருவே வெளியில் வா

அற்புதமான உலகம்
ஆனந்தமான வாழ்வு

அள்ளி அணைத்து கொண்டாட
ஆயிரம் கைகள் .

எழுதியவர் : (29-Dec-13, 5:06 pm)
Tanglish : indru puthithaay
பார்வை : 106

மேலே