உருகிக் கிடக்கும் இரும்புத் துண்டு என் இதயம்

உருகிக் கிடக்கும் இரும்புத் துண்டு
என் இதயம்..

உன் ஒவ்வொரு சம்மட்டிப் பார்வையிலும்
வலிகள் தாங்கி.. வடிவம் கூடி..
இன்பச் சூட்டில்.. துடித்துக் கிடக்கும்..

காதல் நீர்..
உனக்குள் ஊற்றெடுத்து
என் மனம் நனைக்கும் போது
நீ அறிவாய்..

நம் காதல் சின்னமாய்
மாறிக் கிடக்கும் என் இதயத்தை..

இல்லை..
என்ற சொல் அடித்துச் சென்றுவிடாதே..

பாரம் தாங்காமல்..
சிதறிப்போய்..
மண்ணுக்குள் மண்ணாகிவிடும்..

எழுதியவர் : வெ கண்ணன் (1-Jan-14, 10:19 pm)
பார்வை : 128

மேலே