கொஞ்ச நேர கனவு....!

வெள்ளைபல் கடித்து
வெக்கம் வரவழைத்து
கால்விரல்களில் ரங்கோலி வரைந்து
கைவிரல்களால் முந்தானை கசக்கிய
தேவதையை
கண் முன்னே பார்த்த அத்தருணம்...ம்ம்ம்...
நினைவுகள் சேகரித்த புகைப்படங்கள்
கனவுகளில் சிலவரி கவிதையாக
இதோ...

சிந்திக்க வழி தேடி
எப்போதோ நண்பன் சொன்ன ஞாபகம் வர
நகம் கடித்து துப்பிய
குப்பைத்தொட்டியிலும்
பூக்களின் காம்புகளாய்
தெரிந்தது
உன் கூந்தலின் வைத்த பூவை
அதிகம் ரசித்ததின் விளைவு..! :)

நகங்கள் சேகரித்து
வைத்திருக்கேன்.
உன் நாணத்தை
சேகரிக்க முடியாதவனாய்...

உன் முகம் வரைய
மூன்று புள்ளி போதும்
ஆயுத எழுத்தாய்
பார்த்து
அழகாய் வரைந்திடுவேன்..

முகத்தில் வெளிவரும்
முகப் பருக்களை பார்த்து
கண்ணாடி அழகாகிறது.
காரணம் புரிகிறது
உன் முகம் காட்டுகிறது.

ஏழு அதிசயமும் ஞாபகம் வந்தாலும்
அழகாய் தெரிவதில்லை
நீ எதிரே வரும்போதெல்லாம்

அதிசயம்...
பகலில் சூரியன் தெரிவதில்லை.
நிலவு முகம் காட்டும்
உன் கரு வெள்ளை கண்கள்
வெளிச்சத்தின்
முன்னால்...!!!!!

எழுதியவர் : (4-Feb-11, 2:01 pm)
சேர்த்தது : ungalG
பார்வை : 435

மேலே