நான் உங்களிடம் கேட்டது

(பார்த்தவுடன் வரக்கூடாது காதல்;பக்குவத்தில் வரவேண்டும்..!
வந்த-நண்பர்களுக்கும்,
வராத-தோழிகளுக்கும் )
.........
.........
அந்தி வானம்
ஆளரவமில்லாக் கடற்கரை ...!
என்னளவு-கொந்தளிக்காது;அலை வீசாது
கண் முன்னே விரிந்தக் கடலும்..!

வா காதலா-என்னோடு
வெள்ளலையில் சிப்பி பிடிக்கலாம்..!
வா காதலா-இருவருமிந்த
மெல்லலையில் சிலை வடிக்கலாம்..!

நீ சிலிர்க்கும் காற்று,
நீ மயங்கும் வானம்,
நீ ரசிக்கும் நான்..!

இலக்கியப் பிரியன் நீ-எனக்கு
இலக்கணம் வகு...!
இயற்கை நேசன் நீ-என்னோடு
கடலில் புகு..!

நீ
காதல் சொன்ன போதும்;
கவிதை சொன்ன போதும்-நான்
காதுகளை கதவடைத்த
காரணம் கேள் ...!!

கற்றோர் புகழ-வேண்டுமெனை
பெற்றோர் முன்னில்..!
சிறந்தோர் சபையிலும்-உடன்
பிறந்தோர் கனவிலும் நான்;
பெற வேண்டும் உயரிடம்!-என்றாவது
சேர்வேன் உன்னிடம்; சொல்லிவைத்தேன்
உயிரிடம்...!

அன்பா..!
நான் -கேட்ட
வருடங்கள் முடிந்தது;
காலமும் கனிந்தது-என்
கால்களும் துணிந்தது...!

எங்கிருக்கிறாய் நீ ??

கறுக்கும் இரவை தூதனுப்புகிறேன்-காதலா உனைக்
காலையில் கூட்டிவர...!

ரா.தர்ஷன் (வாலி)

எழுதியவர் : ரா.தர்ஷன் (வாலி) (10-Jan-14, 11:38 am)
சேர்த்தது : ராவணன் தர்ஷன்
பார்வை : 66

மேலே