உலகம் மாறிட்டா டே

காலை கருக்கலுல
நான் எழுந்த
போது நிலவே யில்ல
வானத்துல !

மணி ஆறக்
கடந்த பிறவும்
விடியல இன்னும்
காலம் !

குளிரு மில்ல
மழையு மில்ல
காலையில
கண்ணக் கசக்கி
தெருவுல வீசுனே
பார்வைய !

உற்றாரும்
சுற்றாரும் இல்ல
யோசன செய்ய
புத்தி வேலை
செய்யல !

தேடிப் போனேன்
எதையோ
தூரம் கடந்த பிறவு
நினச்சேன், காணலியே
எங்க ஊரு குளத்த !!

புரியாம தவிச்சுப்
போனேன் !
எனக்கேதும்
ஆகிப் போயிட்டா
இல்ல உலகம்
மாறிப் போயிட்டான்னு !

மணி என்னல
ஆவுதூ..!
அம்மா என்ன வைய
சிலாகித்து எந்திச்சேன் !!

உலகமின்னும்
மாறல டேய்ன்னு
கூப்பாடு போட்டேன் !!

எழுதியவர் : பாவூர்பாண்டி (24-Jan-14, 7:23 am)
பார்வை : 98

மேலே