மனிதா

மனிதா..,

மந்திர உலகில்
மாயை கொள்ளாதே.,
கற்பனை உலகை
கலைத்திட செல்லாதே.,

இன்மை வாழ்வில்
இழப்புகள் நிச்சயம்.

பருவங்களின் தோற்றம் போலே.,
பாரங்களுக்கு தோற்றம் கொள்ளாதே...

உரிமை உலகிலே
ஊண்டுகோலாய் உன்
எண்ணங்கள்..

எண்ணங்களில் எழும்
கேள்விகளுக்கு,
பதில் தேடி செல்லாதே.,
உன்னுள் உள்ளது
கேள்விக்கு பதிலும்,
பதிலுக்கு கேள்வியும்..

உனக்கும் பிறருக்கும்
வித்தியாசம் பார்,
வியந்து விடாதே...
என்றாவது செல்லும்
உன் புகழ் இமயத்திற்கு
காத்திரு..

இயந்திர உலகில் நீ
இயந்திரம் ஆகாதே.,
படைப்பவானாய் வா...

பழைய பாரங்கள்
உன்னுள் பத்திரமாய்
தொலைந்துவிடும்..

வெற்றியின் விதைகள்
கவியாய் இங்கே,
காத்திருக்காதே, படி,
காவிய உலகில்
உன் காவியம் தீட்டு,
வளரும் மரமாக உன் வெற்றி..,
அன்று எழுது உன் உள்ளத்தில்,
நானும் மனிதன் என்று..... !!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Jan-14, 4:21 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : manithaa
பார்வை : 60

மேலே