உயிர் கொண்ட உள்ளம் - அமிர்தா

நான்!
நிழலைத் தேடி வருவதும்
நீ!
நிலை தடுமாற செய்வதும் என்னை
நிபந்தனையில்லா
நிகழ்வாகிவிட்டது.

காண நினைக்கும் போது
காணாமல் மறைவதும்
களையும் கனவாய்
போவதும் - இதமளிப்பதில்லை
என் இதயத்திற்கு

எழுத நினைத்த எண்ணங்களும்
பேச நினைத்த வார்த்தைகளும்
உன்னைப் போலத்தான் - என்
நினைவில் நில்லாமல்
பாதாளம் நோக்கி
பலியாகி போகிறது

காணமுடியா காதல் வலையில்
சிக்கித் தவிக்கும் சிற்றுயிராய்
சிதை சுருங்குகிறது.

உயிர் அழியும் முன்
பார்க்க எண்ணம் வை.

சாகும் வரை வாட விட்டு
உனக்கான வரை
உயிர் வதை செய்யாதே

பேச நினைக்கிறேன்
பெரிதாக
பார்க்க நினைக்கிறேன்
பலமாக

எண்ணம் இருந்தால்
எழுதியனுப்பு
பேச நினைத்தால்
சொல்லியனுப்பு

உயிர் கொண்ட வரை
உள்ளம் உதிராமல்
உனக்காக
காத்திருப்பேன்
நான்!

எழுதியவர் : Amirthaa (25-Jan-14, 6:24 pm)
பார்வை : 125

மேலே