கையாலாகாத ஏழை -லிமரைக்கூ

இரப்பையை நிறைக்குது வெறுமை
இல்லாமையைச் செரிக்குது
இயலாமை எனும் வறுமை
***************************************************
உண்மை உருமறைந்த வாழ்க்கை
உயிர் இருந்தும் இல்லாது
உலவுமிந்த யாக்கை
****************************************************
படித்தன்று பெற்றேன் பட்டம்
பயனில்லை தொழிலில்லை
பார்க்கிறேன் இன்னும் விட்டம்
*********************************************************
தொழில் தர கேட்கிறார் லஞ்சம்
தொகுத்து எதைப் பார்க்கிலும்
மனச் சாட்சிக்கே பஞ்சம்
***************************************************************
கெட்டுக் கிடக்குது நாட்டினில் நீதி
தட்டிக் கேட்க மனம் இருத்தும்
யாருக்கும் இல்லை நாதி
*******************************************************************
வாழ்வைத் தீர்மானிக்குது காசு
வசதியில் வாழாத மனிதா நீ
வலிந்தவன் காலடித் தூசு
***********************************************************

எழுதியவர் : சிவநாதன் (28-Jan-14, 2:35 am)
பார்வை : 144

மேலே