தேடல் ஆடவன்
நினைவலைகள்
மனதிற்கு உரியவனாய் மாறியது
உன்னை கண்ட பிறகு நிரந்தரமாக !
மனதிற்கினிய இசையையும்
மனம் ஏற்க மறுக்கிறது
உன்னையே நினைத்துக் கொண்டிருப்பதால் !
உதிரம் உறைந்து
துடிப்பை நிறுத்தி
உணர்வை இழந்து நின்றேன்
உன்னைக் கண்ட ஒரு நிமிடம் !
மறக்க முடியா கனங்களில்
ஒன்றாய் மாறியது அன்று !
என் கண்ணீருக்கே ஆறுதல் கூறிய
உன் கண்கள்
என் ஆனந்த்திற்கு துணை சேராத என்ன !
தூரக் காற்று உயிரைக் காப்பாற்றாதா என்ன !
நீ என்னை விட்டி தூரத்தில் உள்ளாய்
என் உயிரைக் காக்க வருவாய் !
தேடுகிறேன்
என் பார்வை உயிரைத் தாண்டி
என் கற்பனையை பாதையாக்கி தேடுகிறேன் !
மனம் தளர்ச்சி அடையாமல் !.............