கிரந்த எழுத்தின் கெஞ்சல் கீழக்கோட்டை சுபா பூமணி

கிறங்கடிக்கும்
தமிழெழுத்துக்கள் இருக்கையில்,
"கிரந்த எழுத்துக்கள்" ஏனென்று
ஒதுக்கித்தான் வைத்தேன்.
ஒதுங்கிநின்ற எழுத்துகளில்
ஒன்றென்னிடம் கெஞ்சியது
என்னையும் சேர்த்துக்கொள் என்று...
என்னவனை மாமா, அத்தானென
கெஞ்சி, கொஞ்சி அழைத்தது
போதுமென சற்று குரலை
உயத்தியே அழைத்தேன்
என்னிதய ராஜாவே வாவென்று...

எழுதியவர் : சுபா பூமணி (28-Jan-14, 3:37 pm)
பார்வை : 61

மேலே