ஐந்தறிவின் காமம்

முடை நாற்றம்
மூக்கு ருசித்தாலும்.
வாலையொதுக்கி நீ வசீகரிக்காதவரை
வன்புணரமாட்டேன்.

கொம்பினும் வலியதாய்
எம்மிலுன் எதிர்பார்ப்போ ?
எமக்கிடையிலான சண்டை
நீ நடத்தும் தேர்தல் போலும் !

மயிலையே 1
உன் நெற்றிப் பள்ளமும்
வாய்க்கடை நுரையும்
சிமிழும், கல் மடுவும்
மல்லாந்து கிடக்கும் சோழி போலுன்
காம பீடமும்
காமுறச் செய்யவில்லை என்னை.

ஆயினுமென் ஆண்மை
உன் வரவேற்பறையின்
வால் திரை விலகக் காத்திருக்கிறது
திரைப் பட ரசிகன் போலே

விரிய மிக்க விதைகள்
வரிசைக் கிரமமாய்
துப்பாக்கித் தோட்டாக்கள் போலே
அடுக்கிக் கிடக்கின்றன
அடுத்த கட்ட உத்தரவிற்காய்

இசைவிருந்தால்,
படைத்தல் நிமித்தமாய்
பகிர்ந்து கொள்வோம் வா

உன்
அனுமதியின்றி அனுபவிக்க
நானொன்றும் மானிடப் பதரில்லையே

எழுதியவர் : ராசைக் கவிபாலா (28-Jan-14, 7:26 pm)
பார்வை : 72

மேலே