பரவாச் சிறகுகள்
கடல் நீரை குடிநீரை
எண்ணிச் ஏமாறும் நீர்த்திவலைகள் !
கண் இமைபோல் வந்து சேரும்
நிலையான கருவிழி அல்ல பாதியோடு ஒன்றிணைய !
தென்றல் காற்றாய் நினைத்தெளுந்தேன்
பிறகு தெரிந்தது
அக்னிக் காற்றுக்கு அன்னை என்று !
ஆலமரம் விழுது என்று கணித்து
மகிழ்ச்சியை பகிர்ந்து விரும்பி
முருங்கை செடி இலையை பிடித்து விழுந்தேன் !
என் மனமே அலுத்து புலம்புகிறது
என் இப்படி நடத்து கொண்டாய் என்று !
காற்றை தேடி செல்கையில் ஏன்
மூச்சு தேவைஇல்லாமல் செலவழிக்கிறாய் !
நடந்து செல்கையில் ரத்தம் கொட்டுகிறது
காலில் முள் என்று
பிறகு தெரிந்தது அது பாம்பு பல் என்று !