பெண்ணே மறைத்துவிடு

என் வலிகளை
புன்னகைக்குப் பின்னே
ஒளிக்கிறேன்..
நீ புரிந்து கொண்டது போல்
நடிக்கிறாய்...
உனக்கு தெரியக்கூடாது
என்று தானே
சிரிப்புப் பூ அணிந்து
என் மனதை மறைக்கிறேன்..
அறிந்து கொள்ள அருகில்
வரும்போதெல்லாம்
வாய்ப்பூட்டு
இடுகிறேன்..
இறப்பை எண்ணி
நான் துடிக்கவில்லை
உன் இருப்பில் இல்லையே
என்றே துடிக்கிறேன்.
மறக்க முடியாமல்
கண்ணீர் வடிக்கிறேன்.

எழுதியவர் : முரளிதரன் (18-Feb-14, 6:04 pm)
சேர்த்தது : முரளிதரன்
பார்வை : 93

மேலே