நான்

நேசிக்காத நெஞ்சை நாளும்
யாசித்தே கரைகிறேன் நான்!!!


வேஷம் கொண்ட உன்னிடம்
பாசம் கேட்கும் பாவி நான்!!!

உடல் கேட்கும் உன்னிடம்
உள்ளம் எதிர்பார்க்கும் பைத்தியம் நான் !!!

கண்ணீர் கொடுக்கும் உன்னிடம்
காதல் கேட்கும் முட்டாள் நான்!!!

நெருப்பை கக்கும் உன்னிடம்
குளுமை கேட்கும் குமரி நான்!!!

எரிந்து விழும் உன்னிடம்
இனிமை கேட்கும் மூடன் நான்!!!


தூக்கி எரியும் உன்னிடம்
தஞ்சம் கேட்கும் குழந்தை நான்!!!

எழுதியவர் : நிலா மகள் (20-Feb-14, 11:26 am)
Tanglish : naan
பார்வை : 77

மேலே