வாழ வழி கிடைத்திடுமோ

மனித மனம் மாறிடுமோ
===மரங்க ளெல்லாம் வளர்ந்திடுமோ
மாதம் மும்மாரி பெய்திடுமோ
===மக்கள் தாகம் தணிந்திடுமோ

காவிரி கரை புரண்டிடுமோ
===கங்கை புனித மாகிடுமோ
காடு கரை கொழித்திடுமோ
===காட்டாறு செழித்திடுமோ

விவசா யந்தான் ஓங்கிடுமோ
===வீட்டு மனைகள் வீழ்ந்திடுமோ
வற்றிய ஆறெல்லாம் வழிந்திடுமோ
===வாடிய பயிரெல்லாம் தழைத்திடுமோ

எண்ண மெல்லாம் ஈடேறுமோ
===ஏக்க மெல்லாம் தீர்ந்திடுமோ
என்னின் எதிர்கால சந்ததிகள்
===வாழ வழி கிடைத்திடுமோ ?

எழுதியவர் : லலிதா.வி (24-Feb-14, 4:08 pm)
பார்வை : 160

மேலே