நெடுஞ்சாலை பயணம்
ஒரு நெடுஞ்சாலை பயணம்......
பனி சொட்டும் இரவு;
என்னை நீ இருக்கி பிடித்து அமர்ந்திருக்கும் உணர்வு;
உன்னை கண்டு வெட்கத்தில் மூழ்கி மேகங்களுக்குள் ஒளிந்துகொள்ளும் நிலவு;
பனி இரவிலும் நீ அடம் பிடித்த குல்பி;
ஒன்று வாங்கி இருவர் உண்ட அழகு;
என் மூவிரண்டாறு புத்தியிலும் ஆளும் உன் நினைவு...................
இவை, விடியலே கூடாது என நான் ஏங்கிய கனவு..................