சில்கள்

தேமா புளிமா
நிறைந்த கவிதை போல்
தேய்மானங்கள் நிறைந்ததுதான்
வாழ்கை !
*
கோயில் குளங்கள் என
சுற்றியும் ஒரு
புண்ணியமும் சேரவில்லை
என் கால் செருப்புகளுக்கு !
*
ஊதிய பலூன்
உடைந்ததும் அழுகின்ற
பிள்ளைக்குத் தெரியுமா
ஊதி வெடித்த
பலூன் தான் நம்
உலகமென்று !
*
உண்டிக் கோலும்
நொண்டிக் கட்டங்களும்
மறைந்தே போயின
ப்ளேஸ்டேஷன் காலத்தில் !
*
அறுவடை செய்யக்
காத்திருக்கும் நெற்கதிர்களிடம்
மட்டுமே கண்டேன்
இன்றைய நாணத்தை !

விவேக்பாரதி !

எழுதியவர் : விவேக்பாரதி (8-Mar-14, 12:15 pm)
பார்வை : 103

மேலே