சில்கள்

இயலாது என்பதைச்
சொல்லத் தெரியாமல்
என்னோடு தினமும்
வாழும் தனிமை !
*
நான் தான் பெரியவன்
என்ற அகந்தை
எப்போதும் உண்டு
நகத்திற்கு ! அதனால் தான்
வளர வளர
வேட்டபடுகிறான் தினசரி !
*
வாழ்க்கையைத் திருப்பும்
ஒவ்வொரு முனையும்
முப்பருவங்கள் சங்கமிக்கும்
குமரி முனையே !
*
இல்லை என்ற
சொல்லையே வாழ்வில்
இல்லையென்று ஆக்கிவிடு மகனே
விதியின் பேச்சு !
*
மனிதா வாழ்வில்
இனிதாய்ப பேசக்
கற்றுக்கொள்
வெற்றி உனது வசம் !

விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (8-Mar-14, 12:32 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 84

மேலே