எதிர்பார்ப்பு

என்னவளே.
நாம் இருவரும்
ஒன்றாக
அமர்ந்து தான் சென்றோம்.

ஓயாமல் பேசிக்
கொண்டோம்

காலங்களின் சூழ்ச்சி.

காதலர்களான நம்மை
பிரித்து விட்டது.

இப்போது

என்னோடு உறவாட
உனக்கு விருப்பமில்லை.

தோழியாக
உன்னோடு உறவாட
எனக்கு விருப்பம் தான்.

என் உயிரோடு
கலந்தவளே.

உன்னை நினைத்து
என்னை
ஏங்க வைப்பவளே.

உன் ஒரு நிமிட
கால அளவை
என்னிடம்
செலவழித்து விட்டுச்செல்.

ஒரு ஜென்ம சந்தோசத்தை
அனுபவித்ததாய்
நன் உணர்வேன்..

எழுதியவர் : சி கே வி கார்த்திக் (8-Mar-14, 10:33 pm)
Tanglish : edhirpaarppu
பார்வை : 250

மேலே