நிகழ்வுகள் மாற வேண்டும்

ஒன்றல்ல இரண்டல்ல
குடும்பங்கள் உறவுகள்
ஒற்றுமை குறைந்து
திசைமாறிப் போயின

சொத்தும் சுகமும்
நினைத்திருக்க
சொந்தம் மறந்திருக்க
என் வசம் இருப்பதும்
எல்லாமும் எனக்கு என்றே
மனக்கணக்கு போடுகிறார்

உடன் பிறந்தோரை
நினைப்பதில்லை
உண்மை தெரிவதில்லை
சேர்த்து வைத்த காசெல்லாம்
செழுமை தருவதில்லை

நடுநிலை என்பது
நடுவீட்டில் மட்டும்
இருக்கும் காலம்
நிலையென்றால்
இல்லாது போவது
எப்போது?

தெய்வத்தின் மீது
நம்பிக்கை
தினம் பார்க்கும்
நடவடிக்கை
தெளிவு கொடுக்க
மனம் மாற
நிகழ்வுகள் மாற வேண்டும் .

(இன்று பல குடும்பங்களில், மூத்த சகோதரர் , சகோதரர்கள், உடன் பிறந்தவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள் - அதனை கருத்தில் கொண்டு வடித்த வரிகள் )

எழுதியவர் : arsm1952 (10-Mar-14, 7:42 pm)
பார்வை : 248

மேலே