திசுக்கள் எல்லாம் காதல்

உரையாடல்களின் போது
என் பார்வை
விலகியதுணர்ந்து.....
செல்லமாய் அதட்டுகிறாய்
நீ.....! அப்பொழுதும்
ஒன்றுமறியாது போல்
முன்போலவே
புன்னகைத்தாடுகிறது
உன்
செவியணித் தொங்கல்கள்.....!!!
******************************************

இன்னும் மொட்டுக்கள்
திறக்காமல்
முறைத்துக்
கொண்டுதானிருக்கிறது ....
இன்று நீ........
கால் நனைக்க
மறந்து போய் விட்டிருந்த
தாமரைக்குளம்.....!!!
*****************************************

உன் நுனிவிரல்
தீண்டல்களுக்காகவே
பன்னீர்ப் பூக்கள்
பிடித்து வைத்திருக்கிறது....!
என்னைப்போலவே...
பூங்காக்களின்
மர இருக்கைகளும்.....!!!
***************************************

இதுதான் நானென்று
சிறுவயதுப் புகைப்படம்
காட்டுகிறாய்...!
இப்பொழுதே
யூகங்களாய் விளையாடத்
தொடங்கிருக்கிறாள்
என்
எதிர்கால மகள்....!!!
****************************************

சிலநிமிடக் காத்திருப்பு
பொழுதுகளினூடே....
முன் நெற்றிக்
கூந்தல் ஒதுக்கி நீ.....
முறைக்கும்
ஊடல் கவிதைகளுக்காய்
தினமும் தாமதிக்கத்
தோன்றுகிறதெனக்கு.....!!!

எழுதியவர் : சரவணா (14-Mar-14, 4:34 am)
பார்வை : 197

மேலே