கடவுள் வரம் கொடுப்பாரா,,,
உயிர் கொடுத்தவர்
என்ற நம்பிக்கையில்
பாசத்தை தேடினேன்
தந்தையிடம்
உன்கூட பிறந்தது
பெண்பிள்ளைகள்
என்றார்!
உடல் கொடுத்தவள்
என்ற நம்பிக்கையில்
பாசத்தை தேடினேன்
தாயிடம்
நீ தனி
பிள்ளையில்லை
என்றார்!
ஒரே இரத்தம்
என்ற நம்பிக்கையில்
பாசத்தை தேடினேன்
உறவுகளிடம்
நீ மட்டுமா
எங்கள் உறவு
என்றார்கள்!
உயிர்கொடுப்பான் தோழன்
என்ற நம்பிக்கையில்
பாசத்தை தேடினேன்
நண்பரிடம்
பார்த்து பரிதாபப்பட்டனர்
பாசம் வைக்கவில்லை!
படைத்தவன் படியளப்பான்
என்ற நம்பிக்கையில்
பாசத்தை தேடினேன்
தெய்வத்திடம்
நம்பிக்கை கொடுத்தான்
நடக்கும் என்று
பாசம் வைக்கவில்லை!
வருங்கால மனைவி
என்ற நம்பிக்கையில்
பாசத்தை தேடினேன்
காதலியிடம்
போராடினால்தான்
கிடைப்பேன் என்றாள்!
அவளும் பெண் தானே!
அன்றுதான் புரிந்தது
என்மேல் எனக்கே
பாசம் இல்லை என்று!
இதுதான்
இறைவன் கொடுத்த பாசமோ!
கடவுள் வரம் கொடுப்பாரா?,,,