நான் நீயானேன்

நானும் மலர் சூடினேன்
உன் இதழ் செடியில்
பூத்த புன்னகை பூவை...

நானும் பூப்பெய்தினேன் உன்
காதல் விசை என்
விழியில் தெறித்த போது...

நானும் வெட்கம் கொண்டேன்
என் செல்பேசியில் உன்
பெயர் ஒளிர்ந்த போது...

நானும் காதலித்தேன் என்
ஹார்மோன்கள் கண்ணாமூச்சியாடி குருதி தெருக்களில்
உன்பெயர் பொறித்த போது...

நானும் கருத்தரித்தேன் உன்
காதல் கருமுட்டை என்
இருதய பாதையில் விழுந்தபோது...

நானும் பிரசவித்தேன் என்
கவிக் குழந்தைகளை உன்
விழிப் புனர்ச்சியால்...

நானும் விலக்கடைந்தேன் உன்
கரம் சேராத அந்த
மூன்று நாட்களில்...

எழுதியவர் : சுபகூரிமகேஸ்வரன் (எ ) skmaheshwaran (17-Mar-14, 2:20 pm)
பார்வை : 141

மேலே