மழை வருமா

திருடித்தீர்த்த தண்ணீரை
தீர்த்தமாய் பொழிகிறாய்

மண்னேன்னும் பூவுக்கு
மண் வாசம் தருகிறாய்

கண்ணில் படுகிறாய்
காற்றில் மிதக்கிறாய்

கையில் பிடிக்கும் வேளையிலே
மரணத்தை சுவைக்கிறாய்

சில்லிடும் பொழுதுகள்
சிரித்திடும் மொட்டுக்கள்

நான் நனைவதாய் இப்போது உணருகிறேன்
அட மனிதனாய் போனேனே ,.. வருந்துகிறேன்

பூவாய் இருந்தால் சிலிர்திருபேன்
மானிடன் ஆனதால் பொறாமை கொள்கிறேன்

மழையில் நனைந்த ஞாபகத்தோடு

நட்புடன் க நிலவன் .......

எழுதியவர் : க நிலவன் (18-Mar-14, 6:35 pm)
Tanglish : mazhai varumaa
பார்வை : 72

மேலே