நீ என்ன சொல்கிறாய்
உனக்காக காத்திருக்கவில்லை
வந்ததைகூட
என்னால் உணரமுடியவில்லை
நீயாக என்னுள் வந்தாய்!
நெருப்பையே சுட்டெரிக்கும்
நெருப்பாக என்கோபம்!
நீரையே சுத்தப்படுத்தும்
நீராக நீயிருந்தாய்!
எவ்வாறு உன்னால் மட்டும் முடிந்தது
என் கோபங்களை காதலிக்க!
நீயும் என்போல் இருப்பதாலா!
இல்லை
உன்கோபங்களை நான் ரசிப்பதாலா?
கோபப்பட்டதால் காதலர்களானோம்
பாசம் வைத்தபோது பிரிந்தது விட்டோம்
இது தான் காதலா?
நீ என்கூட இல்லாவிட்டாலும்
உன் நினைவுகளுடன் இருந்ததனால்
நான் தோற்கவில்லை!
ஆனால்
நீ என்கூட இருந்திருந்தால்
இதற்குமேலே வெண்றிருப்பேன்!
காதலியே!
இதிகாச காலத்திலும் இருந்திருக்கிறார்கள்
இராவணனும் சூர்ப்பனகையும்,
இதுகலியுககாலம்
இராமன் சீதை இருக்கவே வாய்ப்பில்லையாம்
நான் நம்புகிறேன்
நாம் இருப்போம் என்று!
நீ என்ன சொல்கிறாய்?