எப்போதோ சுவாசித்த
எப்போதோ சுவாசித்த
தப்பான காற்று
இன்னும்
நெஞ்சுக்குள்...
முக்கி முக்கி
வெளியேர முடியாமல்
விக்கி விக்கி....
*******************************
திறந்து கிடந்த
ஜன்னல் வழியே
பறந்து வந்த
குப்பை காகிதத்தில்...
வள்ளுவரின்.........
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு
*************************************
முட்டாள்கள்தான்
இருளைக் கண்டு
பயம் கொள்வர்...
அறிவாளிகளுக்கு
அகக் கண்கள் ஒளிரும்
*************************************
துளையிருக்கும்
மரத்தில்தான்
நல்லிசை பிறக்கும்
***********************************
சோம்பிக் கிடந்த பூனை
எழுந்து நின்று
எட்டிப் பார்த்தது......
அதன் நிழலில்
புலியின் தோற்றம்
***********************************
அம்மாவாசை இருளில்
நிலைவைக் காணாத
அலைகடலும்
அமைதியாக கிடந்தது
கோமாவில்..........