எப்போதோ சுவாசித்த

எப்போதோ சுவாசித்த

தப்பான காற்று

இன்னும்

நெஞ்சுக்குள்...

முக்கி முக்கி

வெளியேர முடியாமல்

விக்கி விக்கி....


*******************************


திறந்து கிடந்த

ஜன்னல் வழியே

பறந்து வந்த

குப்பை காகிதத்தில்...

வள்ளுவரின்.........

அகர முதல எழுத்தெல்லாம்

ஆதி பகவன் முதற்றே உலகு

*************************************

முட்டாள்கள்தான்

இருளைக் கண்டு

பயம் கொள்வர்...

அறிவாளிகளுக்கு

அகக் கண்கள் ஒளிரும்

*************************************

துளையிருக்கும்

மரத்தில்தான்

நல்லிசை பிறக்கும்

***********************************

சோம்பிக் கிடந்த பூனை

எழுந்து நின்று

எட்டிப் பார்த்தது......

அதன் நிழலில்

புலியின் தோற்றம்


***********************************


அம்மாவாசை இருளில்

நிலைவைக் காணாத

அலைகடலும்

அமைதியாக கிடந்தது

கோமாவில்..........

எழுதியவர் : கவிதை, (20-Mar-14, 8:33 pm)
Tanglish : eppOthO suvaasitha
பார்வை : 63

மேலே