மௌனக் கண்ணீர்

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
*
வேதனைத் தாங்க முடியாமல்
வெடித்து வெளியேறுகின்றன
அவளது மௌனக் கண்ணீர்
*
மாப்பிள்ளை பெண்ணுக்கும் போட்டி
விட்டுக் கொடுத்து யார் எடுப்பது?
குடத்திற் குள்ளிருக்கும் மோதிரம்.
*
வலியில் துடித்தான்
தடவினார்கள் சுண்ணாம்பு
தேள் கொட்டிய இடத்தில்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (25-Mar-14, 10:42 am)
சேர்த்தது : துறைவன்
Tanglish : mounak kanneer
பார்வை : 114

மேலே