குறி 2

அறிவறிந்து அறிவதுதான் அறிகுறி!!....

சறுக்கில் சறுக்கி மகிழ்வது என்னவோ
குழந்தைகள்தான் - பெருகி வளர்வது
அந்த பள்ளியின் சுவர்கள் மட்டும் தான்!!....

சமச்சீர்க் கல்வி - மெட்ரிக் பள்ளிகள் மூடல்!!....
அரசுப் பள்ளிகள் கூடல்!!....

இணைய தளத்தில்
முடிவுகளை வெளியிட
தேர்வுத்துறை தயக்கம் - மின்வெட்டு எதிரொலியோ?!....

தகவல் தொழில்நுட்பத் துறையில்
ஏற்பட்ட தடங்களுக்கு வருந்துகிறோம்?!....

முகநூல் வாசகனின் முகம்
மறைக்கப்பட்டிருக்கிறது?!...

தயவு செய்து உற்றுப் பார்க்காதீர்கள்?!....
தந்தைமார்கள் அறிவுப் பால்
புகட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்!!...

வாசிப்பின் வசம் சுவாசம்!!...

எழுதியவர் : வைகை அழகரசு (26-Mar-14, 3:06 pm)
பார்வை : 77

மேலே