படையும் நடுங்கும்

பரிகாரம் என்றவுடன்
பாலும் முட்டையுடன்
வந்து விடுகிறாய்.

திருமணம் ஆகவில்லை
என்றால்
திரு நாகேஸ்வரம் வரை வந்து
தரிசனம் செய்கிறாய்.

வீடு தேடி வந்தாலோ
கம்பெடுத்து அடிக்க வருகிறாய்.

நான் இருக்கும் இடத்தையெல்லாம்
விலை நிலமாக்கி
வீடு கட்டிக்கொண்டால்
நான் எங்கு செல்வது..

எழுதியவர் : வே.புனிதாவேளாங்கண்ணி (26-Mar-14, 3:44 pm)
Tanglish : padaiyum nadunkum
பார்வை : 131

மேலே