ஆன்மாவின் ஆணி வேர்
வானத்து நிலவும் தூங்குகிறது
தூங்கவில்லை என் விழிகள் - அதில்
வளர்பிறையாய் உன் நினைவுகள்
ஆழியின் அலைகளும் நிசப்தமாய்
நிறுத்தவில்லை என் உதடுகள் - அதில்
நெடுந்தூர பேருந்து போல் நீ கவிதையாய்
காற்றின் சக்தியும் சலனமற்றதாய்
தளரவில்லை என் கால்கள் - அதில்
அழகிய ஊர்வலம் போல் நீ பயணமாய்
என் உடலை உயிர் பிரிந்தாலும் கூட
ஆன்மாவின் ஆணி வேராய் நீ எனக்குள்.....