ஆன்மாவின் ஆணி வேர்

வானத்து நிலவும் தூங்குகிறது
தூங்கவில்லை என் விழிகள் - அதில்
வளர்பிறையாய் உன் நினைவுகள்

ஆழியின் அலைகளும் நிசப்தமாய்
நிறுத்தவில்லை என் உதடுகள் - அதில்
நெடுந்தூர பேருந்து போல் நீ கவிதையாய்

காற்றின் சக்தியும் சலனமற்றதாய்
தளரவில்லை என் கால்கள் - அதில்
அழகிய ஊர்வலம் போல் நீ பயணமாய்

என் உடலை உயிர் பிரிந்தாலும் கூட
ஆன்மாவின் ஆணி வேராய் நீ எனக்குள்.....

எழுதியவர் : சந்திர போஸ் (29-Mar-14, 3:31 pm)
சேர்த்தது : சந்திர போஸ்
Tanglish : aani ver
பார்வை : 88

மேலே