இரு வழி ஒரு பார்வை

ஒரு முறை
உன்னை நேரில் காண
நான் பல முறை
என் உறக்கத்தை தொலைத்ததுண்டு ....

நம் இரு விழி
ஒரு பார்வையால்
ஒன்றாய் கலக்க
என் இமைகள் இமைக்காமல் இருந்ததுண்டு .....

கதிரவன் உச்சி வானில்
வட்டமிட்டு விளையாடுகையில்
என் விழிகள் விழிக்காமல்
உன் கனவில் நிலைத்ததுண்டு.....

என் உடம்பில்
காய்ச்சல் அடிக்கையில்
உன் சுகம் பற்றி விசாரிக்க
உன் வாசல் நானும் வந்த்ததுண்டு.....

என் உயிரை
இறைவன் பறிக்கு முன்னே
உன் உயிராய் என்னை நினைக்க
நானும் என்ன செய்வேன்
கண்ணே நீயும் சொல்லு ....

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (2-Apr-14, 11:16 am)
பார்வை : 92

மேலே