நான் என்ன செய்ய
உன்னைப்பற்றி கவிதை
எழுத நினைத்தேன்!
உன் பெயரே கவிதை
என்று விட்டுவிட்டேன்!
உன்னை ஓவியமாக
வரைய நினைத்தேன்!
உன் முகமே ஓவியம்
என்று விட்டுவிட்டேன்!
உன்னை சிலையாக
செதுக்க நினைத்தேன்!
உன் எழில்வதனமே போதும்
என்று விட்டுவிட்டேன்!
நான் என்ன செய்ய???
உன்னிடமே கேட்கிறேன்!!
உன்னைப்போல் ஒரு பெண்
வேண்டுகிறேன்-நீயோ
அசலாக நான் இருக்க
நகல் எதற்கு என்கிறாய்!!
நான்!!!!!