ஆதலால் காதல் செய்வீர்

எளிமையாக்குங்கள்!
உங்களின் நேசமானவரின் வாழ்க்கையை - கொஞ்சம்
எளிமையாக்குங்கள்!

ஆதாரம், காரணம், விளக்கம் எதிர்நோக்கும்,
வினோதச் சிறையிலிருந்து
விடுவித்து,

உங்களின் இஷ்டமானவரின்,
இஷ்டமான வாழ்க்கையை - வாழும்படி
எளிமையாக்குங்கள்!

வாழ்க்கை எத்தனையோ முறை உங்களை சூழ்நிலைக் கைதியாய் உள்ளாக்கி இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை, அச்சூழ்நிலைகளுள் ஒன்றே இது. ராமும், சீதாவும் காரின் பின் சீட்டில் அமர்ந்து வர விருப்பப் பட்டார்கள். இருந்தாலும், அவ்வாறு செய்தால் பாரதியை வெளி உலகம் கார் டிரைவர் என்று நினைக்க வைத்துவிடுமே என்று தயங்கினர். ஆகையால் ராமை பின் சீட்டில் அமரச்செய்து சீதா முன் சீட்டில் வந்தமர்ந்தாள்.
இவ்விருவரும் எங்கோ பிறந்தார்கள், எப்படியோ வளர்ந்தார்கள். சிறுதும் எதிபார்ப்பின்றி எதிர்கொண்டனர். பார்வை பரிமாற்றி, பக்குவமாய் பழகினர். தன்னிலை மறந்த பாசம் பீரிடவே, பார்த்துக்கொள்ளும் தருணத்தை தாமாகவே உருவாக்கினர். ஒருவரை ஒருவர் உண்மையாய் உள்வாங்கினர். உள்ளம் கலந்தனர். உறவாய் மாற உறுதியெடுத்தனர். உலகமறிய மணந்துகொள்ள ஆயத்தமாயினர். இப்படி இனிதே ஆரம்பமாயிற்று இவர்களின் காதல் கதை!

இந்தக் காதல் கிளிகளிடம் திருமணத்திருக்கு முன் சில வார்த்தைகள் பரிமாறிக்கொள்ள பாரதி விரும்பினார். ஆகையால் மூவரும் காரில் ஏறி பிரயாணத்தை தொடங்கினர். இது நெடுந்தூரப் பயணமில்லை என்றாலும், இந்த விவாதம் இவர்களின் நெடுங்கால வாழ்க்கைப் பயணத்திற்கு ஓர் வழிகாட்டியாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இரு நல்ல நண்பர்கள், இறுதி மூச்சுள்ளவரை கரம்பற்றி இருக்க நினைப்பதைவிட வேறென்ன தகுதி வேண்டும் திருமணம் செய்துகொள்ள?


ராமும், சீதாவும் நண்பர்களாவதற்கு முன்னமே இவ்விருவரும் பாரதிக்கு நெருக்கமே. ராம், தெளிவானவன், திடமானவன், தேர்ந்த பொறுமைசாலி, முதிர்ந்த புத்திசாலி. மிகவும் நியாயமானவன், நல்ல குணாதிசியங்கள் கொண்ட நன்மகன், அன்புள்ளம் கொண்டவன், அயராது உழைப்பவன், முடியாதென்ற வார்த்தை கணவிலும் நினையாதவன். சீதாவின் குணமோ - பழகியவர்கள் பக்குவப்படுவர், பழக நினைப்பவர்கள் பாசம் கொள்வர். அனைவரையும் அன்பால் அரவணைக்கும் ஆற்றல் கொண்டவள், மயானத்தையும் தாயின் அன்பு மடியாக்கும் சக்தி கொண்டவள், நடனத்திற்கு அழகு சேர்க்கும் இவளது நடனம். இவளின் திறமையைப் பட்டியலிட்டாள், அது பல பக்கங்கள் கொண்ட படிப்பினை புத்தகமாகிவிடும். இவளுக்கு எதிரியாய் இருக்க நினைப்பவர்கள் கடும் பயிற்சி எடுக்க வேண்டும், இல்லையேல் எளிதில் சிநேகம் கொள்ளச் செய்துவிடுவாள். இந்த இரு அற்புதக் குழந்தைகளுக்கு திருமணம். இவர்களின் திருமண வாழ்க்கை உலகிற்கு உதாரனமாக இருக்கும் என்பது பாரதியின் நம்பிக்கை.

பாரதி காரிலுள்ள சிடி பிளேயரை இசைக்கச் செய்தார், அதில் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி...." என்ற பாடல் ஒலிக்க, மூவரும் மெய் மறந்தனர். பின் சீட்டின் நடுவில் இருக்கும் ராமோ தன் கைகளை விரித்தபடி கொஞ்சம் முன்னுக்கு வந்து இருவரின் தோல்களிலும் தன் கைகளைத் தவழச் செய்தான். அந்தக் கணம் ஒரு தெய்வீக சங்கல்பம் சர்வ சாதாரணமாக அரங்கேறியது. பாடலின் ஜீவன் தேவலோகத்திற்கு இட்டுச் சென்றதால், ஆனந்த வெள்ளத்தில் திளைத்திருந்தனர். அன்றாட வாழ்கையில் எத்தனை முறைகள் இதுபோன்ற தெய்வீக சங்கல்பங்கள் நம்மை கடந்து சென்றிருக்கும். ஆனால் ஏதோ காரணங்களால் அவைகளை கவனிக்க மறந்திருக்கிறோம் அல்லது மறுத்திருக்கிறோம். பாடல் முடியும் திருவாயில் சீதா விழித்தெழுந்து அடுத்தபாடல் துடங்கும் முன் பாடலை நிறுத்திவிட்டு, பாரதியிடம், நீங்கள் தனியாக செல்லும்போது தான் காரில் பாடல் கேட்பீர்கள், யாரேனும் துணையாய் வரும்போது பெரும்பாலும் உரையாடவும், அவர்களின் கருத்தை உள்வாங்கிக் கொள்ளத்தானே விரும்புவீர்கள், இன்று மட்டும் ஏன் இந்த மாற்றமென்று கேட்டாள்?

இதைக் கேட்ட பாரதி செல்லமாக சீதாவின் கன்னத்தை தட்டியபடி, ராமுக்கு காரில் பாடல் கேட்பது மிகவும் பிடிக்கும் என்பதை அறிவேன், மேலும் இன்றைய தினம் உங்களுக்கானது என்று தொடர்ந்தார். எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதை அறியவோ, ஆராயவோ நாம் கூடவில்லை மாறாக, உங்களின் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் புரிந்துகொள்ளப் போகிறோமென்றார். சீதா, நீ யாரையேனும் நேசித்தாள், நீ அவர்களின் விருப்பு, வெறுப்புகளை மதிக்கத் தெரிந்திருக்கவேண்டும். எனக்கு சினிமா பிடிக்கவே பிடிக்காதுதான் ஆனால் என் மனைவிக்கு சினிமா பார்ப்பதில் அலாதி சந்தோசம். நான் என் மனைவியை நேசிக்கும் பட்ச்சத்தில், அவளின் விருப்பங்களில் பங்கேற்று அந்தத் தருணத்தின் விருத்தியை பண்மடன்காகுவேன். அதேபோல் அவளின் வெறுப்புகளில் இருந்து ஒரு கவசமாய் மாறி பேணிக் காப்பேன். இதுபோன்று என் மனைவிக்கு கத்திரிக்காயைப் பார்த்தாலே கதறிக்கொண்டு ஓடுபவள் இன்று கத்திரிக்காயில் கணக்கிலடங்கா வகைகள் செய்து சந்தோஷ வெள்ளத்தில் என்னைக் கதிகலங்கச் செய்கிறாள். ஏன் தெரியுமா? கத்திரிக்காய் எனக்கு மிகவும் விருப்பமானதால் இந்த மாற்றம். நாம் நேசிபவர்களின் விருப்பு, வெறுப்புகளை மதிக்க தெரிந்து கொள்வதே, வாழ்க்கையில் இணைந்து வாழ எடுத்துவைக்கும் முதற்ப்படி.

விருப்பு வெறுப்பு மனிதனுக்கு இயற்கையிலே கிடைத்த உரிமை. ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தனிச்சிறப்பு கொண்டவன் மேலும் தனித்துவத்தோடு வாழ எல்லாத் தகுதியும் பெற்றவன். எப்பொழுது நாம் நேசிபவர்களின் விருப்பு, வெறுப்புகளை மதிக்கப் பழகிக் கொண்டோமோ, அக்கணமே அவர்களின் தனித்துவத்தை கலங்கப்படுதாமல் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். இப்படிச் செய்யும்பொழுது, நமக்கு ஏற்றாற்போல் அவர்களை மாற்றாமல், அணு அளவும் சிதைக்காமல் உள்வாங்கிக் கொள்கிறோம். ஆக சீதா, நான் ராமிடம் வைத்திருக்கும் அன்பானது, அவன் விரும்பியதைச் செய்வதே தவிற, நான் வெறுப்பதை தவிர்ப்பதல்ல

ராம் தன் கைகளை தோள்களிலிருந்து விலக்கிக் கொண்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான். ராமை அறிவேன், மறு வினாடியே, "தான் சீதாவின் விருப்பு, வெறுப்புகளை மதிக்கிறேனா? என் நேசம் சுயநலம் தாண்டிய காதலா?" என்ற கேள்விகளை தன்னுள் வினவினான். இது ராமின் வியகத்தக்க குணம். எப்பொழுதுமே முனைப்புடன் தெரிந்துகொண்டதை நடைமுறை படுத்தவே துடியாய் துடிப்பவன்.
இந்தத் தருணத்தில் பாரதி காரை சற்று ஓரமாய் நிறுத்தி சீதாவை பின் சீட்டிற்கு மாறச்சொன்னார். ஏனெனில் தனக்கு ராம் வெகுநேரமாக பின் சீட்டிலிருந்து முன்பக்கமாக, இருவருக்கும் இடையில் முகத்தை சொருகி வருவது வருத்தம் தந்தது. ராமும், சீதாவும் சற்றுத் தயங்கினர். இதைக் கண்ட பாரதி, "என்னைப் பற்றி டிரைவர் என்று தானே நினைப்பார்கள்? அவர்கள் நினைப்பதிலும் என்ன தவறு இருக்க முடியும்? கார் ஒட்டுபவர் ஓட்டுனர் தானே? பிறர் என்ன நினைப்பார்கள் என்பது முக்கியமல்ல, நாம் என்ன நினைக்கிறோம் என்பதே மிக மிக அவசியம். நீங்கள் இருவரும் பின் இருக்கையில் அமர்வதே எனக்கு சந்தோசத்தை தரும் என்றார். சற்று கூர்ந்து கவனித்தால், நீ முன்னிருந்து பின்னிருகைக்கு செல்லும் இந்த சிறிய செயல் எனக்கு அளவற்ற ஆனந்தத்தை தருகிறது, அப்படியிருக்க அந்தச் செயலை செய்யாமல் தாமதிப்தால் என்ன பயன்? உடனே சீதா எழுந்த பின் சீட்டிற்கு சென்று பாரதியை பார்த்து, சில சமயங்களில் உங்களின் அன்பு எங்களை மெய் சிலிர்க்க .செய்கிறது, பெரும்பான்மை நேரத்தில் தங்கள் அன்பை கையாளத் தெரியாமல் திகைத்துப் போகிறோம், அல்லவா ராம்?

இதற்கு பாரதி, அன்பு கொண்டவர்கள் மீது, அன்பை வெளிப்டுத்த அவர்களின் வாழ்க்கை முறையை சற்று எளிமையாக்க முயற்சிப்பதே அடிப்படையாகும். நீங்கள் யாரையேனும் நேசித்தால், அவர்களின் வாழ்க்கையை சற்று உற்று நோக்கி எங்கெல்லாம் எளிமை படுத்துதல் சாத்தியமோ, அங்கெல்லாம் எளிமைப்படுதுங்கள். அது பிரதான கதவின் மூன்றாவது சாவியை செய்வதாகவும் இருக்கலாம். இதன் மூலம் நான் எப்பொழுது வேண்டுமானாலும் அழைப்பு மணியை அடிக்காமலே, அன்பானவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் விட்டினுள் நுழைய முடியும். இதுவும் ஒருவகையான எளிமைபடுதுதலே. இதேபோல், சரியான போதிய தகவல்களை நம் உறவுகளோடு பகிர்ந்து கொள்ளுதல், எங்கே செல்கிறோம், எங்கே தங்குவோம், எப்போது வருவோம், எப்படி வரும்வோம், இரவுணவிற்கு என்ன வேண்டும் போன்ற அத்தியாவிசய சமாச்சாரங்களைத் தெளிவாக எடுத்துரைப்பத்தின் மூலம் எளிமை படுத்துகிறோம். இதுமட்டுமின்றி, மன்னிப்பை பெற காத்திருக்காமலும் நன்றியை எதிர்பார்க்காமலும் நாம் நேசிப்பவர்களின் வாழ்க்கையை வெகுவாக எளிமயாக்கலாம். பொருளாகட்டும், போற்றிப் பாடுவதாகட்டும்
அதனை ஏற்றுக்கொள்வதில் சிறிது தயக்கம் கொண்டவர்கள் நம்முள் பெரும்பாலானோர். ஒரு பந்தத்தில் நுழைந்தவுடம், இதன்மூலம் என்னென்ன பெறமுடியும் என்று நினைப்பதைவிட, என்னென்ன கொடுக்கமுடியும் என்று நினைப்பதே சாலச் சிறந்தது. எனினும், அன்பானவர்கள் நமக்களிப்பதை - பொருளாகட்டும், அன்பாகட்டும், புகழாகட்டும் அதை யதார்த்தத்துடன் பெற்றுக்கொள்கையில், நாம் அந்த அன்பர்களின் வாழ்வை எளிமை எளிமை படுத்துகிறோம்.

அதற்குள் கார் ராமின் அடுக்குமாடி குடியிருப்பை அடைந்துவிட்டது. விடைபெறுவதற்கு முன் பாரதி, நாம் நேசிபவர்களிடம் எதற்கெடுத்தாலும் விளக்கம் கேட்கும் வற்புறுத்தலில் இருந்து விடுதலை கொடுத்து, உறவின் கட்டாயங்களை கொஞ்சம் எளிமை படுத்துவது முக்கியமானது. எதைச் செய்வதற்கு முன்னும், பின்னும் விளக்கம் சொல்லிச் சொல்லி விளங்கச் செய்வது மாதிரி கொடுமையான செயல் வேறொன்றுமில்லை. மனிதர்கள் எப்பொழுதுமே சரியானதையே செய்வார்கள் என்று சொல்ல முடியாது, சில நேரங்களில் சிறு தவறுகள் நேரக்கூடும், நேரும். ஆனால், தவறிழைக்கும் பொழுது அவர்மேல் கொண்ட நம்பிக்கை மட்டும் தளர்ந்து விடக்கூடாது, செய்த காரியம் தவறாக அரங்கேறி இருக்கலாமே தவிர, அவர் எண்ணம் எப்போதும் அவ்வாறு உதிதிருக்காது. நம்பிக்கை இழந்த காதல் நாதியற்றுப் போகும். நம்பகத் தன்மையோடு உள்ள காதலில், செய்தது , செய்யாதது போன்ற எதற்குமே காரணங்கள் எதிர்பார்க்கும் காட்சிக்கே இடமில்லை என்று முடித்தார்.

பின்பு பாரதி காரை விட்டு இறங்கியதைபோல் ராமும், சீத்தாவும் இறங்கினர். இருவரும் பாரதியை ஆறத் தழுவினர், பிறகு இருவரும் முதல்முறை தழுவதுபோல் இருக்கத் தழுவினர். ராம், சீதாவின் கரத்தை பிடித்தபடி, பாரதியிடம், நான் இவளின் விருப்பு, வெறுப்புகளுக்கு மரியாதை கொடுப்பேன். எந்தெந்த வகையில்ளெல்லாம் இவளின் வாழ்கையை எளிமை படுத்த முடியுமோ, அந்தந்த வகையிலெல்லாம் எளிமை படுத்துவேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் இவளின் செயல்களை வைத்து எண்ணத்தை சந்தேகப் படமாட்டேன், மேலும் எந்தவித விளக்கமும் எதிர்பார்க்க மாட்டேன்.சீத்தாவும் இதே கருத்தைதான் வெளிப்படுத்துவாள் என்று நம்புகிறேன் என்று கூறி முடித்தான்.

சீத்தாவும் ஆம் என்பதுபோல் தலையசைத்து, மனமார்ந்த நன்றி பாரதி என்றும், நீங்கள் காட்ம் அளவற்ற அன்பிற்கு கோடான கோடி நன்றிகள் என்றாள். பாரதி காரில் ஏறி, சீத்தா நேசிபவர்களுக்கு நாம் செய்ய நினைப்பதர்க்கு எல்லையே இல்லை. இன்னும் என்ன செய்யலாம் என்றே கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்போம். இதன் மூலமே நாம் நம் காதலை நேசிபவர்களிடம் வெளிபடுதுகிறோம்.

நீங்கள் உங்களின் திருமணத்தின் மூலம் பலருக்கு வழிகாட்டியாய் அமைய வேண்டுமென்பது என் ஆசை. உங்கள் மேல் நான் வைத்திருக்கும் அன்பின் அளவை நீங்கள் அளப்பது இயலாத ஒன்று, வருகிறேன். வாழ்த்துக்கள், நலமாயிருங்கள் என்று காரை ஓட்ட ஆரம்பித்தார்.
வேகத்தை கூட்டியபடி கார் பறந்து சென்று மறைந்தது. ஆனால் அவரின் அன்பு மட்டும் மறைந்துவிடாமல் எங்கும் வியாபித்திருந்தது.

எழுதியவர் : கணேஷ்குமார் balu (4-Apr-14, 9:03 pm)
சேர்த்தது : Ganeshkumar Balu
பார்வை : 555

மேலே