இப்படிக்கு ஓர் இந்தியன்

ஜனநாயகம் என் சதைத் துனுக்குகள்!
மதசார்பு எனக்கு மலக் கழிவுகளே!
சாதியம் இங்கே சவக்காடே யாகும்!
இறையாண்மை நமக்கு இதயக் கூடு!!!

இலக்கண விதிகள் இவையே இந்தியாவில் ...
இடிபட்டுக் கொள்கிறோம் இங்கேயே!!???
ஏராளமானோர் இலக்கண விதி அறியா
கைநாட்டு காராளர்களே இங்கு....

ஜனநாயக வரையறையில் சத்தியமாக
சாத்வீக பாரதமும் செதுக்கபடுகிறது!!
செப்பேடுகளை அறிய ஒளியறியா
குருடர்களே அதிகம் இங்கே
என் செய்வது நாம்???

மதசார்பு மரித்து போய்
பிரேத மேடையில் போர்த்தபட்டுள்ளதாம் ????!!!
அநாதை பிணங்களுக்கு எரியூட்ட
எவரும் இங்கே அனாதைகள் இல்லையே...

சாதிகளுக்கு நாமகரணம் மட்டுமே
சூட்டியுள்ளோம் அழைப்புகள் அனைத்தும்
புனைபெயர்களிலேயே...

இறையாண்மைஇங்கே மார்பில் தவழும் மேலாடை!!!
மேலாடை விசயத்தில் நாம் மேலைநாட்டு
விசுவாசிகளாகி கால் நூற்றாண்டு கடக்கிறது...

மாற்றங்களுக்காக மரித்து கொண்டிருக்கும்
மனதுடன் ஓர் இந்தியன்....

எழுதியவர் : தேசம் (5-Apr-14, 11:42 am)
சேர்த்தது : எஸ்.கே .மகேஸ்வரன்
பார்வை : 58

மேலே