அவளானதும்
எப்படி முடிகிறது உன்னால்
,
முடியுமே உன்னால்
முடிந்தால் உன்னால்
முடிந்திருக்கும் உன்னால்
தீண்டிவிட்டாய் தூண்டிவிட்டாய்
சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டானோ,
திரும்ப திரும்ப சொல்ல
திரும்பவில்லை ஒரு சொல் கூட
உன்னிடமிருந்து,
நீ ஆச்சர்யமா,ஆனந்தமா?
அர்தமில்லாத அர்த்தமா?
விழுங்கிக்கொண்டிருந்தேன்உன்னை
விலகி கொண்டிருந்தாய் விட்டு,
சொல்ல வருகிறாய்
சொல்லே இல்லாமல்
இருக்கும்போது சொல்லாய்,
புரிந்து கொண்டதும்
பிரிந்து விடவில்லை
அது ஒன்றே நீ,
இரண்டு வரிகளில்
இம்சிக்க கேட்கிறாய்,
முதல் வரி நீ
முகவரி நீ
மறைத்துகொண்டாய்
புகைப்படம் எடுக்க மனதையும்?
மொந்தையின் கள்
நீ
போதை மனம்,