கால்கள் உண்டு மனிதனல்ல

இரு கொம்புகள்
உண்டு மாடு
அல்ல
சவாரிமட்டும் செய்கிறது
தன்னம்பிக்கையுடன்...............!

வேகமாக
ஓடும் சிருத்தையல்ல
சீறிப்பாய்கிறது
வலிமையான
சிந்தனையுடன்...................!

வேகமாய்
ஓடும் மான் அல்ல,
வெண்மையான
உள்ளம் பதுங்கவும்
தெரியாத அப்பாவி..............!

கால்கள் உண்டு
மனிதனல்ல- மிருகமும்
அஞ்சிடும் இயற்கையும்
ஒதுங்கிடும்
எல்லாம் தெரிந்த
மனிதனை கண்டு............!

இடி இடிக்கும்
மின்னலும்
மின்னும் - ஒதுங்குவதற்கு
வீடில்லை தெருவோரம்
அநாதை................!


லெத்தீப்
,

எழுதியவர் : லெத்தீப் (8-Apr-14, 1:20 pm)
பார்வை : 51

மேலே