நாற்காலி திருவிழா

உதடுகளில்
உற்சாக தேன் சுமந்து
ஊர் ஊராய்
பவனி வருகிறார்கள்
எங்கள் தேசத்தின்
அயிந்தாண்டு அரசியல்வாதிகள் ....!

அன்று
ஒன்றாக வந்தவர்கள்
இன்று
தனித்தனியே வருகிறார்கள் ....!

அறுவடை செய்வதில்
மட்டுமே
இவர்களுக்கு
அத்தனை ஆனந்தம்
ஓட்டுக்கள்
பெட்டிக்குள் பதுங்கியதும்
சத்தமில்லாமல்
காணாமல் போவார்கள் ....!

அறுவடை செய்ததை
பாதுகாக்க
ஓட்டு சேகரிக்கும் சிலர் ...!

இனி
அறுவடை செய்ய
ஓட்டு சேகரிக்கும் சிலர் ...!

சின்ன வட்டம்
பெரிய வட்டம்
என
எல்லா வட்டங்களும்
வசை மாரி பொழிந்து
ஏப்பம் விட்டாயிற்று
வாக்காளனின் வறுமையை .....!

வாங்கி சென்றவர்கள்
வளமுடன் வாழ
கொடுத்தவர்கள்
வறுமையுடன் வாழும்
வாழ்க்கை தானே நிரந்தரமாயிற்று .....!

நாற்காலி
திருவிழாவில்
யார் ஜெயித்தாலும்
நாமம்
வாக்காளனுக்கு தானே .....!


பிரிந்தவர் சேர்ந்தும்
சேர்ந்தவர் பிரிந்தும்
அரிதாரம் பூசி
மீண்டும் இவர்கள்
பவனி வர இருக்கிறார்கள்
அடுத்த
நாற்காலி திருவிழாவில் ...!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

எழுதியவர் : வெற்றி நாயகன் (8-Apr-14, 11:05 pm)
பார்வை : 294

மேலே