மயானம்
இறுதி சடங்கை
இனிதே முடித்து
இறுதியாக இடர் பாடில்லாமல்
அமைதியாய் உறங்கும் இடம் ...
இனி இல்லை
ஆட்டங்கள்
பாட்டங்கள்..
போட்டிகள்
பொறாமைகள் .
போராட்டங்கள்
சூதாட்டங்கள் ..
கருவிலும் அமைதி
மயானத்திலும் அமைதி
இடைப்பட்ட வாழ்வில்
அக அமைதி மட்டுமே
ஆனந்தமான அமைதியை
அளிக்கும் என்ற
தாத்பரியத்தை
அற்புதமாய் உணர்த்தும் இடம் .......