எழுதாத கவிதைகள்

எழுதாத கவிதைகள்
எத்தனையோ பலகோடி
அழுதாலும் தீராது
அத்தனையும் வறுமையடி

உழுதலும் கிடைக்கவில்லை
உண்மையான இன்பமடி
பழுதுபட்டு போனதுதான்
பாழுமிந்த உள்ளமடி

அழுது விட்டமனம்
அழித்துக்கொள்ள போனதடி
விழுது விட்டமரம்
வேரறுந்து போனதடி

ஊழலும் கூட இன்று
உயர்ந்த மலை ஆனதடி
நிழலும் கூட வென்று
நிஜமாகி போனதடி . . . .

பெல்நகர் பெ.அரங்கசாமி

எழுதியவர் : பெல்நகர் பெ.அரங்கசாமி (12-Apr-14, 10:34 pm)
பார்வை : 63

மேலே