ஒன்றோடு ஒன்று
ஒன்றோடு ஒன்று இணைந்திட்ட
இதழ்கள் இன்பம் தரும் .. ..
ஒன்றோடு ஒன்று இணைந்திட்ட
கைகள் வலுப் பெறும் .. ..
ஒன்றோடு ஒன்று இணைந்திட்ட
இதயங்கள் இனிமைப் பெறும் .. ..
ஒன்றோடு ஒன்று இணைந்திட்ட
உறவுகள் வளம் பெறும் .. ..
ஒன்றோடு ஒன்று இணைந்திட்ட
கண்கள் காதலை வெளிப்படுத்தும் .. ..
ஒன்றோடு ஒன்று இணைந்திட்ட
தோழர்களும் தோழிகளும் இனிமையே .. ..
ஒன்றோடு ஒன்று இணைந்திட்ட
பாட்டும் இசையும் இசைந்திடும் .. ..
ஒன்றோடு ஒன்று இணைந்திட்ட
இளமையும் இனிமையும் புதுமைபெறும் .. ..
இவைஅனைத்தும்
ஒன்றோடு ஒன்று இணைந்திட
வாழ்த்திடும் ...
ந. தெய்வசிகாமணி