தொப்புள்கொடிகள்

இப்பொழுது கவிதைகளை வாசிப்பதை
நிறுத்திவிட்டு அனைவரும்
படுகொலைகள் குறித்து கவலைப்படுவோம்

கோணஸ்வரி கிருசாந்தினி இசைப்பிரியா

குருதி படிந்து கிடக்கும் வாய்ச் சொற்களில்
படுகொலைக்கான தடயங்கள் அமர்ந்திருக்கிறது

ஈழம் குறித்து கலந்துரையாடல் செய்வோம்

பாலச்சந்திரனுக்கு எழுதும் கவிதைகளில்
மூளை கலங்கும் அளவிற்கு
எதுகை மோனை
கைதட்டல்
கண்ணீர் சிந்தல்

விபரீத மவுனத்தில் வீச்சற்ற நடையில்
தேசம் குருதி ஆக
பிணங்களாய் மிதக்கும் ஆற்றிலிருந்து
காயப்பட்ட கால்களையும்
கவிதைகளையும்
கொண்டுவர
அவமானம் நிறைந்த முகங்களோடு
தமிழ்நாடு எங்களை வரவேற்கிறது.

"அறம் வெல்லும் அஞ்சற்க" தொகுப்பிலிருந்து .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (14-Apr-14, 2:21 pm)
பார்வை : 96

மேலே